×

நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

 

திருப்பூர், டிச.25: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ-. தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, மாவட்ட துணைச்செயலாளர் டிஜிட்டர் சேகர், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பகுதி செயலாளர்கள் அய்யப்பன், மின்னல் நாகராஜ், குமார் மற்றும் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : DMK ,Periyar ,Memorial Day ,Tirupur ,day ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...